கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிய உறுதுணையாக இருந்த மோப்ப நாய்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பரிசு வழங்கிய சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன்.
Regional03
குற்றவாளிகளை கண்டறிய உதவிய : மோப்ப நாய்கள், பயிற்சியாளர்களுக்கு பாராட்டு :
அதேபோல் இளையான்குடியில் தகாத உறவை கண்டித்தவரை பெண் உட்பட 5 பேர் சேர்ந்து கழுத்தறுத்து கொலை செய்தனர். இந்த வழக்கிலும் சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளைக் கண்டறிய மோப்ப நாய் லைக்கா உறுதுணையாக இருந்தது.
இதையடுத்து மோப்ப நாய்கள் லைக்கா, ராம்போ, பயிற்சியாளர்கள் வீரமணி, வீரக்குமார், மணிமாறன், கோபால் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.
