இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு - ராமநாதபுரம் மாவட்ட கடைசி நேர பேருந்துகள் இயக்கும் நேரம் :

இரவு நேர ஊரடங்கை முன்னிட்டு  -  ராமநாதபுரம் மாவட்ட கடைசி நேர பேருந்துகள் இயக்கும் நேரம் :
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமி டெட், காரைக்குடி மண்டல பொது மேலாளர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கரோனா 2-ம் அலை தீவிரமாகப் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக் கில் ஏப்ரல் 20-ம் தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை பேருந்துகள் இயக்கவும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமை களில் பேருந்துகள் இயக்க முழுமையாகத் தடை விதித்தும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட் டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் நகர பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும், மேலும் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, அந்தந்த ஊர்களுக்கு இரவு தங்கல் செய்யப்படும் பேருந்துகள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in