பாலியல் பலாத்கார வழக்கு - ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை :

பாலியல் பலாத்கார வழக்கு -   ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை  :
Updated on
1 min read

பாலியல் பலாத்கார வழக்கில் சரக்கு ஆட்டோ ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே சேதுக்கரையைச் சேர்ந்தவர் 36 வயது திருமணமாகாத பெண்.

இவர் 19.3.2015 அன்று தனது சகோதரர் வீட்டுக்குச் செல்வதற்காக தண்டாரேந்தல் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது திருப்புல்லாணி அருகே பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த குருசாமி மகன் புகழேந்தி(29), தனது சரக்கு ஆட்டோவில் அவ்வழியே வந்தார். பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்ற பெண்ணை, தனது வாகனத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி ஏற்றிச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் புகழேந்திக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in