பாவூர்சத்திரம் அருகே - டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலை மறியல் :

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மேலப்பாவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மேலப்பாவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரைச் சேர்ந்தவர் முகேஸ் (27). இவர், நேற்று முன்தினம் அதிகாலையில் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸார், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலையாளி களை கைது செய்யக் கோரியும், மேலப்பாவூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை யால் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால் அக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் மேலப்பாவூரில் ஏராளமான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in