குறிஞ்சிப்பாடியில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு :

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீ தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீ தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையம் சார்பில் நேற்று தீ தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி நிலைய தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். முன்னணி தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், சிவக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் குறிஞ்சிப்பாடி கடை வீதி, பொதுமக்கள் கூடும் இடங்கள்,வணிக வளாகங்கள், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் தீ பாதுகாப்பு வாசகங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் காஸ் அடுப்பினை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்தும், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி அணைப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in