

தஞ்சாவூர் காய்கறிச் சந்தையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என கோட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர், நேற்று அதிகாலையில் 4 மணிநேரம் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் காமராஜர் மொத்த மற்றும் சில்லறை தற்காலிக காய்கறிச் சந்தையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா என தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் பு.ஜானகிரவீந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 2 மணியிலிருந்து காலை 6 மணிவரை 4 மணிநேரம் நேரடியாக ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்துள்ள னரா? என பார்வை யிட்டனர். மேலும், வியாபாரிகள் அனை வரும் கரோனா தடுப்பூசி போட்டுள் ளனரா?, சந்தைக்கு தினமும் எவ்வளவு பேர் வருகின்றனர்? என்பன போன்ற விவரங்களை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காய்கனி வர்த்தகர்கள் சங்க பொருளாளர் எஸ்.கே.சிதம் பரம் கூறியது: தஞ்சாவூர் காம ராஜர் சந்தையில் 94 மொத்த வியாபாரிகளும், 220 சில்லறை வியாபாரிகளும் உள்ளனர். மேலும், பல வியாபாரிகள் இங்கி ருந்து காய்கறிகளை வாங்கிச் சென்று, மாவட்டம் முழுவதும் சில்லறை விற்பனையும் செய்து வருகின்றனர்.
தற்போது, கரோனா பரவல் அதிகமாக இருப்பதால், சந் தைக்கு வரும் வியாபாரிகளும் பொது மக்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்துள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், எங்களின் கோரிக்கையை ஏற்று, ஓரிரு தினங்களில் சந்தையிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.