பேக்கரியை சூறையாடிய : 2 இளைஞர்கள் கைது :

பேக்கரியை சூறையாடிய  : 2 இளைஞர்கள் கைது  :
Updated on
1 min read

ஆரணி அருகே பேக்கரியை சூறையாடிய 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே பேக்கரி உள்ளது. கடந்த 14-ம் தேதி இரவு அங்கு சென்று தின்பண்டங்களை வாங்கிய ரவுடி கும்பல், பணம் கொடுக்க மறுத்து கடையை அடித்து நொறுக்கி சூறையாடியது. இது குறித்து பேக்கரி மேலாளர் சாத்தையா ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேவூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் சக்திவேலை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பலரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in