சாத்தூரில் வீட்டில் வெடி, திரி தயாரிப்பு : 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு :

சாத்தூரில் வீட்டில் வெடி, திரி தயாரிப்பு : 7 பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு :
Updated on
1 min read

பட்டாசு ஆலை அருகே ஒரு வீட்டில் சரவெடி மற்றும் பட்டாசு திரி தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். வீடுகளில் சரவெடிகள், 120 குரோஸ் கருந்திரி, வெள்ளைத்திரி 260 குரோஸ், திரி சுற்றும் காகிதம் 150 குரோஸ் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக சூலக்கரை ரெங்கநாயகி, மணிகண்டன், வீரபாண்டி, கோவிந்தராஜ், சுந்தர்ராஜ், சுலோச்சனா, கணேஷ்வரி ஆகியோர் மீது வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in