Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா தேனியில் தெருவுக்கு ‘சீல்' வைப்பு :

தேனி பாரஸ்ட் ரோடு முதல் தெருவில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி பங்களாமேடு அருகே பாரஸ்ட் ரோடு முதல் தெருவைச் சேர்ந்த 37 வயது நபருக்கு கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அக்குடும்பத்தினருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் 10 வயது குழந்தை உட்பட மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து முதியவர்கள் இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். இத்தெருவுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x