சுவரில் வரைந்திருந்த அம்பேத்கர், பெரியார் ஓவியங்கள் அவமதிப்பு :

சுவரில் வரைந்திருந்த அம்பேத்கர், பெரியார் ஓவியங்கள் அவமதிப்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே சுவரில் வரைந்திருந்த அம்பேத்கர், பெரியார் ஓவியங்களை அவமதித் தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் கிராமத்தில் அம்பேத்கர் காலனி உள்ளது. இங்கு உள்ள மின்மோட்டார் அறையில் சுவற்றில் அம்பேத்கர், பெரியார் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ஏப். 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி, சுவற்றில் உள்ள ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள், சுவற்றில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர், பெரியார் ஓவியங்களை அவமதித் துள்ளனர். தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.மேலும், ஓவியங்களை அவ மதித்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in