கார் மோதியதில் விவசாயி உயிரிழப்பு :

கார் மோதியதில் விவசாயி உயிரிழப்பு  :
Updated on
1 min read

சூளகிரி அருகே கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் மேலுமலை அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்சின்ன மாரப்பா (60). விவசாயியான இவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இம்மிடிநாயக் கனப்பள்ளி பேருந்து நிறுத்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in