காட்டுமன்னார்கோவிலில் - மா. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

காட்டுமன்னார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவிலில் நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரக்கோணம் அருகே சோகனூரில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்தை கண்டித்தும், கொலைகாரர்களை கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணமும் வழங்கிட கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in