திருப்பத்தூரில் - கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு :

திருப்பத்தூரில்  -  கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருப்பத்தூரில் கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வேலன் நகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுள்ள ஆண் ஒருவர் கடந்த வாரம் காய்ச்ச லால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக வந்த அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, கரோனா விதிமுறைகள் படி அவரது உடல் நேற்று மாலை மயானப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

கரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் குடும்பத்தார், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு நோய் பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

அதேபோல, நகராட்சி ஊழியர்கள் வேலன் நகரில் நோய் தடுப்புப்பணிகளை மேற்கொண்டனர். கிருமி நாசினி தெளித்து அப்பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தால் பொதுமக்கள் பெரிதும் அச்ச மடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in