திருவெண்ணெய்நல்லூர் அருகே - பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது :

திருவெண்ணெய்நல்லூர் அருகே -  பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது :
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்ன செவலை கிரா மத்தைச் சேர்ந்த வரதபிள்ளை மகள் ரேவதி (38).

உடல் வளர்ச்சி குன்றிய இவருக்கு திருமணம் ஆக வில்லை. அவர் நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணு (60). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் . இவர் நேற்று தனது மாட்டினை வெட்டி கொன்றுவிட்டு தன் மனைவி நாவம்மாளை அடிப் பதற்கு துரத்தினார். அவர் தப்பி யோடிவிட்டார். இந்நிலையில் ரேவதியின் வீட்டினுள் சென்றார். ரேவதியின் தலை, முகம், கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ரேவதியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துகண்ணுவை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in