3 இடங்களில் : கரோனா மையம் :

3 இடங்களில் : கரோனா மையம் :
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் கரோனா சிகிச்சை சிறைப்பு மையங்கள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போதிய அளவில் படுக்கை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அரக்கோணம் மற்றும் வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட 3 பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இங்கு முதற் கட்டமாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் ஏற்படுத்தப் படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 414 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in