விருதுநகரில் கரோனாவுக்கு 2 பேர் மரணம் :

விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் கிருமிநாசினியை தெளிக்கும் நகராட்சி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்.
விருதுநகர் அய்யனார் நகர் பகுதியில் கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் கிருமிநாசினியை தெளிக்கும் நகராட்சி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்.
Updated on
1 min read

விருதுநகரில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத் தியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையிலும், புதிய வகை உருமாறிய கரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகி ச்சைபெற்று வந்த விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த கூரியர் பணியாளர் ஒருவரும், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியைச் சேர்ந்த கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.

உயிரிழந்தோர் வசித்த பகுதிகளில் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 115 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 232 ஆக அதிகரித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in