Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

கைவினை கிராமத்தில் ஆளுநர் ஆய்வு :

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தை நேற்று பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளைப் பார்வையிட்டு தயாரிப்பு முறைகள் பற்றியும் விற்பனை நிலவரம் பற்றியும் அவர் கேட்டறிந்தார். பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து மாநிலத்தின் வருவாயைக் கூட்டவும் இந்த கைவினை கிராமத்தில் செய்ய வேண்டியவை குறித்து அதிகாரிகளோடு ஆலோசித்தார்.

அதனைத் தொடர்ந்து நோணாங்குப்பம் படகு குழாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படகு சவாரி மேற்கொண்ட ஆளுநர், பேரடைஸ் கடற்கரையைப் பார்வையிட்டார். கடற்கரை பகுதிகளில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புதிய வசதிகள் ஏற்ப்படுத்தவும், சுற்றுலா வருவாயை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x