Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

வண்டியூர் பூங்காவில் அத்துமீறும் காதலர்கள் மீது நடவடிக்கை : நீதிபதியிடம் பெண் வழக்கறிஞர்கள் புகார்

மதுரை வண்டியூர் பூங்காவில் அத்துமீறி நடக்கும் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரிடம் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.

மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபாவிடம், அண்ணா நகர் வழக்கறிஞர்கள் முத்துக்குமார், ராஜேஸ்வரி, ஜெயா, அர்ச்சனாதேவி, வாசுகி, யோக நந்தினி, சீதாலட்சுமி, கார்த்திகா ஆகியோர் அளித்த புகார் மனு:

மதுரை வண்டியூர் பூங்காவில் தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சில காதலர்கள் மரங்கள், செடி கொடிகளுக்குப் பின்னால் மறைந்திருந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இப்பூங்காவில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற தினமும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பெற்றோருடன் வருகின்றனர். காதல் ஜோடிகளின் செயல்கள் சிறுவர், சிறுமிகளின் மனதைக் கெடுக்கிறது.

எனவே பூங்காவுக்கு வரும் காதலர்களுக்கு கட்டுப்பாடு விதித்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை வழங்கவும், ஆசை வார்த்தை கூறி பெண்களை அழைத்து வந்து தவறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித் துள்ளனர்.

இந்த மனுவை மேல் நடவடிக்கைக்காக மதுரை மாவட்டக் காவல் ஆணையர், மாவட்டக் குழந்தைகள் நல அலுவலருக்கு நீதிபதி தீபா அனுப்பி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x