Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
புதுச்சேரி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் எஸ்.ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
காரைக்கால் மாவட்ட தேர்தல் அலுவலராக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடைமுறைகளின்போது நடைபெற்ற கண்காணிப்புப் பணிகள், வருமானவரித் துறை சோதனைகள், பிடிபட்ட தங்கக் காசுகள், பணம் போன்ற விவரங்களை ஊடகங்களுக்கும், வாக்காளர்களுக்கும் வெளிப்படைத்தன்மையுடன் பகிர்ந்துகொள்ளவில்லை.
மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT