Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

அரசு பேருந்து மோதி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரி உயிரிழப்பு :

நாகர்கோவிலில் மொபட் மீது அரசு பேருந்து மோதியதில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட பெண் அதிகாரி உயிரிழந்தார்.

நாகர்கோவில் அருள்நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவிஸ்டெல்லா ஜெனட்(49). கணவன், மனைவி இருவரும் மருத்துவர்கள். கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரியாக ஸ்டெல்லா ஜெனட் இருந்தார். இவர்நேற்று முன்தினம் மதியம் ஆசாரிபள்ளத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

ராணித்தோட்டத்தை கடந்து சென்ற போது, பின்னால் வந்த அரசுபேருந்து மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஸ்டெல்லா ஜெனட் மீது பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறியது. பலத்த காயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஸ்டெல்லா ஜெனட் உயிரிழந்தார். இந்த பரிதாப சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு விபத்து

இதுபோல் நடந்த மற்றொரு பைக் விபத்தில் செவிலியர் உயிரிழந்தார். ஆசாரிபள்ளம் அருகே அனந்தன்நகறர் இந்திராதெருவை சேர்ந்தவர் மீனா(48). செவிலியரான இவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 6-ம் தேதி மகன் ராஜகோபாலுடன் மோட்டார் சைக்கிளில் கொட்டாரத்துக்கு சென்று விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். சுசீந்திரத்தை அடுத்துள்ள ஆசிரமம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து மீனா தவறி கீழேவிழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x