Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கமுதி அருகே இரு தரப்பினர் மோதலில் முதியவர் கொலை :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரய்யா மகன் ராஜமல்லு (60). இவரது குடும்பத்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி (65) குடும்பத்தினருக்கும், கடந்த தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் மோதல் வெடித்தது.

இதையடுத்து துரைப்பாண்டி தரப்பினர் கம்பி, கிரிக்கெட் மட்டை, கம்பு உள்ளிட்டவற்றால் ராஜமல்லுவையும், அவரது உறவினர்களான பால்பாண்டி (50), வேல்ராஜ் (40) ஆகியோரையும் சரமாரியாகத் தாக்கினர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் வழியிலேயே ராஜமல்லு உயிரிழந்தார். பால்பாண்டி, வேல்ராஜ் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக ராஜமல்லுவின் மனைவி மல்லம்மாள் (55) கொடுத்த புகாரின்பேரில் துரைப்பாண்டி (65), அவரது மகன்கள் மாரிச்சாமி (35), சேகர்(32), கோபாலகிருஷ்ணன் (36), விஜயேந்திரன்(28) மற்றும் சோலையப்பன், ஆனந்தகுமார், அருண்குமார், மனோஜ்குமார், தங்கப்பாண்டி, பால்ராஜ், சோலையம்மாள், சுப்புலட்சுமி, மீனாட்சி ஆகிய 14 பேர் மீது மண்டலமாணிக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x