Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
ஓசூர் சந்திராம்புதி என்கிற தர்கா ஏரியை தூர் வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஓசூர் நகரப்பகுதியை ஒட்டியவாறு அமைந்துள்ள சந்திராம்புதி ஏரியில் பராமரிப்பு இன்றி குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. ஏரிக்கரையில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் கட்டிடக் கழிவுகளால் ஏரியின் பரப்பளவு குறைந்து வருகிறது.
ஏரியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப் படுவதால் ஏரியைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஏரியின் ஒரு பகுதியில் ஆகாயதாமரை நிறைந்துள்ளது. ஆகவே சந்திராம்புதி ஏரியை தூர் வாரி சீரமைக்கவும், ஆகாயதாமரையை அகற்றவும், ஏரிக்கரையில் இறைச்சி கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT