Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

சக்கர நாற்காலி இல்லாததால் : அவதிப்பட்ட மாற்றுத்திறனாளி :

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சோலையாறு எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படாததால் வாக்காளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இத்தொகுதி மலைப்பகுதி, சமவெளி என இருவேறுபட்ட நிலப் பரப்புகளை கொண்டுள்ளது. இதில் மலைப்பகுதியில் 89 வாக்குச்சாவடிகள் 59,080 வாக்காளர்கள் உள்ளனர். சோலையாறு எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடி மையம் 217-ல் சாய்வுதளம், சக்கர நாற்காலி இல்லாததால் வாக்காளர்கள் சிரமப்பட்டனர். சோலையாறு பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரை அவரது உறவினர்கள் வாக்குச்சாவடிக்கு தூக்கி வந்தனர். தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு அனைத்து வசதியும் செய்துதரப்படும் என அறிவித்திருந்த நிலையில், சோலையாறு எஸ்டேட் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் இல்லாததால் அதிருப்தி அடைந்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x