Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
புதுச்சேரி லாஸ்பேட்டை, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார் பேட்டை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பொதுப் பார்வையாளர் மஞ்சித்சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.உப்பளம் இமாகுலேட் மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளதை பார்வையிட் டார்.
அந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் இடைவெளியின்றி நெரிசலோடு வரி சையில் நின்றிருந்தனர். அதனை கண்ட சிறப்பு பார்வையாளர், அவர் களை இடைவெளிவிட்டு நிற்கும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்துபல்வேறு வாக்குச் சாவடிகளையும் பார்வையிட்ட அவர், கரோனா தொற்றுகாரணமாக கையுறை வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல், உரிய இடைவெளி விட்டு நிற்பது போன்றவற் றையும் ஆய்வு செய்தார். பொதுமக் களை இடைவெளிவிட்டு நிற்கும்படி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உள்ளனவா எனவும் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT