Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

ஒரே சின்னத்தில் வாக்குகள் பதிவானதாக பரபரப்பு :

நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட சுங்காங்கடை அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்குகள் பதிவாவதாக சில வாக்காளர்கள் அங்கு நின்ற பூத் அலுவலர்களிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் பூத் ஏஜென்ட் முன்னிலையில் சோதனை செய்து பார்த்தனர். அப்போது, ஒரே சின்னத்துக்கு வாக்குகள் பதிவாகவில்லை. சரியாகவே சின்னங்கள் பதிவாகி வருகின்றன என, தேர்தல் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

“பிற சின்னங்களுக்கு வாக்களித்தாலும் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் பதிவாகி வருவதாக சிலர்அளித்த புகாரைத் தொடர்ந்துஇயந்திரத்தில் சோதனை நடத்தினோம்.

ஆனால், அதுபோன்று ஒரே சின்னத்தில் வாக்குகள் ஏதும் பதிவாகவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்த னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x