Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

முத்தியால்பேட்டை பகுதியில் - பறக்கும் படை சோதனையில் ரூ.2.30 லட்சம் சிக்கியது :

புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பறக்கும்படை சோதனையில் ரூ.2.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முத்தியால் பேட்டை தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று முன் தினம் இரவு முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரைநிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தனது பாக்கெட்டில் ரூ.2லட்சத்து 20 ஆயிரம் பணம் வைத்திருந்ததும், காரில் அன்பளிப்பு கவர், வேட்டி, சேலை இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் ஓட்டுநரிடம் இருந்த பணம், வேட்டி, சேலை மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் முத்தியால்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி குமார் தலைமையிலான பறக்கும்படையினருக்கு முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகரில் வாக்காளர் களுக்கு ஒருவர் பணம் பட்டு வாடா செய்வதாக தகவல் வந்தது.இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்று, சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அவரது சட்டை பாக்கெட் டில் ரூ.9,990 ரொக்கம் இருந்தது.விசாரணையில் அவர் அதே பகுதி யைச் சேர்ந்த ஏழுமலை என்பதும், அவர் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ததும் தெரியவந் தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவரை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். இதுதொடர்பாக முத்தியால் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வ.உ.சி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிகாரிகளை பார்த்த உடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து விசாரித்ததில், லாஸ்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்த பாலாஜி (37) என்பதும், ஒரு அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததும் தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.26,500 பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். அவரை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீஸார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x