Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
காரிமங்கலம் அடுத்த முக்குளம் மாரியம்மன் கோவிலூரைச் சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவரது மகன் அன்பரசன் (13). இவர் காரிமங்கலம் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்த அங்கு சென்ற பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள், கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்த அன்பரசனை சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக காரிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT