Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80 கனஅடியாக சரிந்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திமலை, பெங்களூரு நகரம் மற்றும் ஊரகம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது.அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 80 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 80 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 33.14 அடியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT