Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

அரசின் அனைத்துத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்வேன் : திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உறுதி

திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை கே.கே.நகர், கொட்டப்பட்டு, கீழப்புதூர், சுப்ரமணியபுரம், நத்தர்ஷா பள்ளிவாசல், சிந்தாமணி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்டார்.

அப்போது, “திருச்சி கிழக்கு தொகுதி அமைச்சரின் தொகுதி என்ற அந்தஸ்தில் இருந்தாலும், அரசின் எந்தத் திட்டமும் இத்தொகுதி மக்களுக்குச் சென்றடையவில்லை. ஆனால், நான் வெற்றி பெற்றால், அரசின் அனைத்து நலத் திட்டங்களும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு கிடைக்கும் வகையில் செயல்படுவேன்” என்று உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது, திமுக பகுதிச் செயலாளர்கள் பாலமுருகன், மண்டிசேகர், மதிவாணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x