Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM
திமுகவுக்கு எதிராக தனியார் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாகக் கூறி, அதை ஒளிபரப்ப தடை விதிக்க வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தலில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள், முந்தைய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மட்டுமே விமர்சிக்க வேண்டும். கட்சிகளும், வேட்பாளர்களும், தலைவர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் தனி நபர் வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையுடன் தொடர்பில்லாதவை குறித்து விமர்சிக்கக் கூடாது. மேலும் சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை கூறுவதையும் தவிர்க்க வேண்டும் என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தனியார் யூடியூப் சேனல் ஒன்று, மதத்தை பயன்படுத்தி சித்தரிக்கப்பட்ட வீடியோவை திமுகவுக்கு எதிராக திரித்து வெளியிட்டுள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது.
எனவே அந்த வீடியோவை ஒளிபரப்ப தடை விதிப்பதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT