Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

பெற்றோர் பாராட்டியதால் நண்பரை அடித்துக் கொன்ற பிளஸ் 2 மாணவர் : :

கண்டமனூர்: தேனி மாவட்டம், கண்டமனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் தனசேகரன்(17). இதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சீமான் (19). இருவரும் இங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர். தற்போது பொதுத் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. சீமானின் பெற்றோர் தனசேகரை அடிக்கடி பாராட்டிப் பேசுவது வழக்கம். மேலும் ஒப்பீடு செய்து சீமானை திட்டியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு சீமான் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலால் தனசேகரனின் தலை, நெற்றியில் கடுமையாகத் தாக்கினார். பலத்த காயமடைந்த தனசேகரனுக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். கண்டமனூர் போலீஸார் சீமானைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x