பட்டாசு விபத்தில் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆனது :

பட்டாசு  விபத்தில் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆனது :
Updated on
1 min read

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை யில் ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதை யடுத்து, உயிரிழந்தோர் எண் ணிக்கை 27 ஆக அதிகரித்தது.

சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் , கடந்த மாதம் 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். பலத்த தீக்காயமடைந்து சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் அடுத்தடுத்து இறந் தனர். இதனால் உயிரிழந் தோர் எண்ணிக்கை 26 ஆனது.

இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த படந் தாலைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரது மனைவி வீரலட்சுமி (40) நேற்று உயிரிழந்தார். அதையடுத்து, இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in