Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற - திமுகவின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற திமுகவின் கனவுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிராம்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் இரவு பேசியது:

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் நிதானமான ஆட்சியால், இந்தியாவிலேயே வியக்கத்தக்க பல்வேறு முன்னேற் றங்களை தமிழகம் கண்டுள்ளது.

முதல்வரே விவசாயி என்ப தால்தான், விவசாயிகள் வாழ்வு செழிக்க வேண்டும் என குடிமராமத்து பணி, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது என விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை கொடுத்தார். சிறுபான்மை மக்களின் எண்ணங் களை பிரதிபலிக்கும் வகையில் தமாகா செயலாற்றி வருகிறது.

அதிமுக ஆட்சிக்கு முற்றுப்பு ள்ளி வைக்க வேண்டும் என்கிற திமுகவின் கனவுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

குன்னம் தொகுதியில்...

பெரம்பலூர் அருகே கொளக்காநத்தத்தில் குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி நேற்று வாக்கு சேகரித்து பேசியது: நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவர்களுக்கு சென்று சேரவேண்டும்.பொல்லாதவர் களுக்கு செல்லக்கூடாது.அதனால் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள். பெண்களை இழிவுபடுத்தும் திமுகவுக்கு பெண்கள் வாக்க ளிக்கக் கூடாது என்றார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x