நெல்லையில் மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி உயிரிழப்பு :

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து அண்ணன், தம்பி உயிரிழப்பு  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் மேலக்கல்லூரைச் சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன்கள் கிட்டு(27), அருண்(25). இவர்கள், திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் ஒரு ஜவுளிக் கடை அருகே தள்ளுவண்டியில் பானி பூரி கடை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள். அப்போது, தள்ளுவண்டிக்கு அருகில் உள்ள கடையில் இருந்து மின்சார வயர் அறுந்து, தள்ளுவண்டியில் மின்சாரம் பாய்ந்தது. தள்ளு வண்டியை அங்கிருந்து எடுக்க முயன்றபோது, கிட்டு, அருண் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அண்ணன், தம்பி இருவரும் உயிரிழந்தனர். மேலப்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in