ரயில் பயணியிடம் திருட்டு : 2 மணி நேரத்தில் இளைஞர் கைது :

ரயில் பயணியிடம் திருட்டு : 2 மணி நேரத்தில் இளைஞர் கைது :
Updated on
1 min read

கோவையைச் சேர்ந்த பிரியா (39), காட்பாடியில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் நேற்று முன்தினம் காட் பாடியில் ஏறினார்.

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில், இவரது ரயில் பெட்டிக்கு வந்த மர்மநபர், கத்தியைக் காட்டி மிரட்டி, பிரியாவிடம் இருந்து ஐந்து பவுன் நகை, ரூ.5000 ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்து ள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா,ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத் ததால் ரயில் நின்றது. அப்போது அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in