ஆண்டியப்பனூர் வனப்பகுதியில் - காட்டு பன்றி இறைச்சி விற்க முயன்ற இருவர் கைது :

ஆண்டியப்பனூர் வனப்பகுதியில்  -  காட்டு பன்றி இறைச்சி விற்க முயன்ற இருவர் கைது :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே காப்புக்காடு பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் காப்புக்காடு பகுதியில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு தலைமையில், ஆண்டியப்பனூர் பிரிவு வனவர் வெங்கடேசன், வனக்காப்பாளர்கள் பாலாஜி, இளையராஜா, வனக்காவலர் ரவி உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந் தனர்.அப்போது, ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (32), ரவி (50) ஆகிய 2 பேரும் அவர்களது விவசாய நிலத்தில் முள்வேலி அமைத்து காட்டுப் பன்றியை சிக்க வைத்து,அதன்இறைச்சியை விற் பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in