அரசு பேருந்து மோதியதில் கார் ஓட்டுநர் மரணம் :

அரசு பேருந்து மோதியதில் கார் ஓட்டுநர் மரணம் :
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதியதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் பட்டணம்காத் தான் ராம்நகர் அருகே நேற்று இரவு ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து, எதிரே ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. இதில் ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முனியையா மகன் முகேஷ்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணித்த பிரபு, மதன், ஆனந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர். 3 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in