அரசு பேருந்து மீது பைக் மோதியதில் ராமநாதபுரம் அருகே இருவர் உயிரிழப்பு :

லோகநாதன்
லோகநாதன்
Updated on
1 min read

கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(29). இவரது அக்கா மகன் பட்டணம்காத்தான் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த லோகநாதன்(15). இவர்கள் ராமநாதபுரம் அருகே வள்ளி மாடன் வலசையில் நேற்று நடந்த உறவினரின் காதணி விழாவுக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் பட்ட ணம்காத்தானுக்குத் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ஆர்.எஸ். மடை அருகே அம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ரெகுநாதபுரத்தில் இருந்து அரண்மனை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து நின்றது. அதன் பின்புறம் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியது.

இதில் செந்தில்குமார், லோகநாதன் ஆகியோருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடற்கூராய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in