திண்டிவனம் அருகே ரூ.4.22 லட்சம் பறிமுதல் :

திண்டிவனம் அருகே ரூ.4.22 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

திண்டிவனம் அருகே தீவனூரில் ரூ. 4.22 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.

திண்டிவனம் அருகே தீவனூர் நான்குமுனை சந்திப்பில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். லாரி ஓட்டுநரான சென்னை பழையஅலமாதி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த சிவகுமார் (44) ரூ 3,53,840வைத்திருந்தார். உரிய ஆவணங்கள் இல்லாததால் இத்தொகையை பறிமுதல் செய்து, மயிலம் தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் செல்வத்திடம் ஒப்படைத்தனர். இதே போல தீவனூர் நான்கு முனைசந்திப்பில் பறக்கும் படை அலுவலர் மகேந்திரவர்மன் தலைமையிலான குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரியில் இருந்த புதுச்சேரி தவளகுப்பத்தைச் சேர்ந்த நடராஜன்(54) என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ 68,700 ஐ பறிமுதல் செய்தனர். ஒரே இடத்தில் நேற்று நடைபெற்ற சோதனைகளில் ரூ. 4,22,540 பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in