Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவிகள், ஒரு ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், கடந்த 2 நாட்களில் மாணவிகளின் பெற்றோர்களில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
தொடர்ந்து, நேற்று 360 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவிக்கும், பெற்றோர்களில் 2 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 57 மாணவிகள், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோர்களில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT