‘இந்து முன்னணி விழிப்புணர்வு பிரச்சாரம்’ :

‘இந்து முன்னணி விழிப்புணர்வு பிரச்சாரம்’ :
Updated on
1 min read

இந்து முன்னணி அமைப்பு தலைவர் சி.சுப்பிரமணியம் திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் சாத்தியமில்லாத இலவசங்களை அறிவித்து, அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்துக்களையும், கடவுள்களையும் அவதூறாகப் பேசிய கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு, தற்போது கோயில் புனரமைப்புக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்குவதாக திமுக இரட்டை வேடம் போடுகிறது. கோயில் வருமானத்தை கோயிலுக்கு மட்டுமே பயன்படுத்தினால், தனியாக நிதி ஒதுக்கத் தேவையில்லை. இந்த தேர்தலில், இந்து விரோதக் கட்சிகளை தோற்கடிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in