

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாவிட்டால் இன்று முதல் அபராதம் விதிப்பதுடன் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்து ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் வரை குறைந்து கொண்டு வந்த கரோனா தொற்று மார்ச் மாதத்தில் மீண்டும் வேகம் எடுத்து பரவத் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி மாதம் மட்டும் 228 கரோனா தொற்றாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் 167 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் விகிதம் அதிகம்
இது தொடர்பாக வேலூர் மாவட்டஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்-16) முதல் இருசக்கர வாகனத்திலோ அல்லது நான்கு சக்கர வாகனத்திலோ பயணம் செய்பவர்கள் தொடர்ந்து இருமுறை முக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களது வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். முகக்கவசம் அணியாவிட்டால் ஒவ்வொரு நபருக்கும் ரூ.200, இரு சக்கர வாகனத்தில் வருவோருக்கு ரூ.250, நான்கு சக்கர வாகனத்தில் வருவோருக்கு ரூ.500 குறைந்தபட்ச அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.
பரிசோதனை கட்டாயம்