பனியன் நிறுவன உரிமையாளரிடம் : ரூ.95 ஆயிரம் பறிமுதல் :

பனியன் நிறுவன உரிமையாளரிடம் : ரூ.95 ஆயிரம் பறிமுதல்  :
Updated on
1 min read

திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரி பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்தவர் திருப்பூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் முனீஸ்வரன் (38) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.95,200 வைத்திருந்ததும் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in