Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

திமுக வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் - பார்த்திபனூரில் இரு கோஷ்டியினரிடையே மோதல் :

பார்த்திபனூரில் திமுக வேட்பாளர் களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியைச் சேர்ந்த இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது.

திமுக சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி(தனி) தொகுதி வேட்பாளர் முருகேசன் ஆகிய இருவரும் நேற்று மாலை மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூ ருக்கு கட்சியினருடன் காரில் அணிவகுத்து வந்தனர். அப்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்வின்போது திமுகவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே யாருடைய வாகனம் முன்னால் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். போலீஸார் தலையிட்டு தாக்குதலை தடுத்து நிறுத்தினர். அப்போது பார்த்திபனூர் சார்பு ஆய்வாளர் முனீஸ்வரனுக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. பின்பு காவல் துறையினர் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x