திருச்செங்கோட்டில் - வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி, இருசக்கர வாகனப் பேரணி :

திருச்செங்கோட்டில்  -  வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி, இருசக்கர வாகனப் பேரணி :
Updated on
1 min read

100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி மற்றும் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு, இருசக்கர வாகன பேரணி ஆகியவை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஜெயராம ராஜா தலைமை வகித்தார்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரங்கோலிக் கோலம் வரையப்பட்டிருந்தது. அவற்றில் சிறந்தவற்றை தேர்வு செய்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மாதிரி வாக்குப்பதிவு, வாக்காளர் அளிக்கும் வாக்கு வாக்களித்த சின்னத்திற்கே சென்றுள்ளதா என்பதை பார்க்கும் விவிபேட் இயந்திரம் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி புதிய பேருந்துநிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

அப்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. இதில், தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in