Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

தேர்தல் தணிக்கை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் :

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் செய்த நாள் முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் 24 பறக்கும் படை, 24 நிலையான கண்காணிப்புக் குழு, 16 வீடியோ குழு என 64 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்படுகிறது. இதன்மூலமாக, வாகனத் தணிக்கை வாகனங்களை எளிதில் முறைப்படுத்தலாம். தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்த புகார்களை, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6989 மூலமாக தெரிவிக்க, இணைப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, கோட்டாட்சியர் ஜெகநாதன், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x