Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

மது விற்பனையை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படை :

உதகை

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் மதுபான கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் மதுபானம் தொடர்பான புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உதவி மேலாளர் (கணக்கு)கண்ணன் என்பவர் நியமிக்கப்பட் டுள்ளார். இவரை 99407 16136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம். மேலும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க உதகை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் - 9445029724, கோட்ட ஆய அலுவலர் நடேசன் - 98656 11512 ஆகியோரை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள், கள்ள மதுபான விற்பனை, கடத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிப்பர். பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால்உதகை தேர்தல் கட்டுப்பாட்டுஅறை 0423-2450035, 2450036,ஆயத்தீர்வை உதவி ஆணையர்0423-2443693, உதகை கூடுதல் எஸ்பி., 0423-2223802, குன்னூர்டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423-2234211 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x