Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

ரயிலில் சிக்கிதாய், மகள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் வட்டம் கீழ்விலாச்சூர் கிராமம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (34). இவர், சென்னை பூந்தமல்லி பகுதியில் மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (29), இவர் களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் நந்திதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ராஜேஷ் குமாரின் மனைவி ஜெயந்தி தனதுமகள் நந்திதாவை மட்டும் அழைத்துக்கொண்டு நேற்று காலை விரிஞ்சிபுரம் - குடியாத்தம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச்சென்ற சரக்கு ரயிலில் தாயும், மகளும் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந் தனர்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் சபரிநாத் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயந்தி மற்றும் நந்திதா உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x