நெருப்பெரிச்சல் பகுதியில் மேற்கூரைகளை பிரித்து அடுத்தடுத்த கடைகளில் பணம் திருட்டு

நெருப்பெரிச்சல் பகுதியில்  மேற்கூரைகளை பிரித்து அடுத்தடுத்த கடைகளில் பணம் திருட்டு
Updated on
1 min read

நெருப்பெரிச்சல் பகுதியில் அரிசிக்கடை, மருந்து கடை உட்பட நான்கு கடைகளில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜிஎன் கார்டன் பகுதியிலுள்ள அரிசிக்கடை, மருந்து, துணி மற்றும் பலசரக்கு கடைகளில் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு உரிமையாளர்கள் பூட்டிச்சென்றனர்.

நேற்று காலை துணிக் கடையை உரிமையாளர் தமிழ்வாணன் திறந்துள்ளார். அப்போது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அருகில் இருந்த கடைக்காரர்களும், தகவல் அறிந்து, தங்களது கடைகளை திறந்து பார்த்தனர். அப்போது அருகருகே அமைந்துள்ள நான்கு கடைகளிலும் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு, பணம் மற்றும் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

மேலும், அருகே கட்டுமானப் பணி நடக்கும் கட்டிடத்தில் தொழிலாளர்கள் இரவு தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர்களது இரண்டு அலைபேசிகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக அளிக்கப் பட்ட தகவலின்பேரில் அனுப்பர் பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி போலீஸார் சென்று, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

நான்கு கடைகளில் லட்சக் கணக்கான பணம் மற்றும் பொருட்கள் திருடுபோன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in