தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு கிராமத்தில் அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைத் தலைவர்கள் கமரி நிஷா, ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ரேஷன் கடைகளில் எடை குறைவின்றி பொருட்கள் வழங்க வேண்டும். ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சின்னச்சாமி, தாலுகா செயலாளர் முருகேசன் ஆகியோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in